காதலுற்ற பொழுதிலிருந்து
வாழ துவங்குகின்றேன்…
அதிகாலை ஈரக்காற்றுடன்…
வண்ணங்கள் அப்பிய மலர்களுடன்…
கையசைக்கும் குழந்தைகளுடன்..
புன்னகைக்கும் முகங்களுடன்…
———————————————————–
நீ…
வண்ணதாசன் எனக்கெழுதிய
காதல் கடிதம்.
———————————————————
மனப்பேழை நிறைய
பொதிந்து கிடக்கின்ற
காதலை…
பகிரத் தடுக்கின்றன…
ஆராய்ச்சிப் பணியின் சிறு தோல்வி…
கழுவப்படாத நேற்றைய சமையல் தட்டுகள்…
துவைக்கவேண்டிய துணிகள்..
வாங்கவேண்டிய மளிகை…
வருவதாய்ச் சொன்ன இரவு விருந்து..
பதிலனுப்பா மின்னஞ்சல்கள்…
தேம்பியுள்ள சோம்பல்…
ஒருநாள்
கால அட்டவணைகளைக் கிழித்து…
உன் பெயர் நிறைப்பேன்.
( ஒரு வேளை
அத் தைரியம் வராமலும் போய்விடலாம்).
——————————————————————–
நீண்ட பயணம் …
களைப்பில்லாமல் உடன் ஓடி வருகிறது
உன் நினைவு …
————————————————————
பேசிச் சலிப்புற்று…
கணிப்பொறியை அணைத்தபின்…
அவ்விருட் திரையில்
ஒளிர்ந்து….
அறை நிறைகின்ற
உன்னுடன்
மறுபடியும்
பேசத் துவங்குகின்றேன்.
——————————————————-
Very nice and lovely lines !!!
நீண்ட பயணம் …
களைப்பில்லாமல் உடன் ஓடி வருகிறது
உன் நினைவு …
nice lines
நீ…
வண்ணதாசன் எனக்கெழுதிய
காதல் கடிதம்.
Excellent. I Just finished reading ” Vannathaasan kadithangal” a good read., After reading that book these lines seems to be more powerful.
Theva prakash
நீண்ட பயணம் …
களைப்பில்லாமல் உடன் ஓடி வருகிறது
உன் நினைவு
really really good lines. you should be poet writing songs for tamil cinema!